சசிகலா முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற, சில வாரங்களிலேயே, தமிழக முதல்வராகவும் பதவியேற்கிறார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, அதன் நிர்வாகி செந்தில் குமார் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால், ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறாக உள்ளது. நல்ல முறையில் பன்னீர்செல்வம், முதல்வராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக, ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார். விரைவிலேயே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் புதிய முதல்வரை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும். வீண் கால விரயம் ஏற்படுத்தும் இத்தகைய பணிகளை, உச்சநீதிமன்றம் தலையிட்டு, நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் சட்டப்பஞ்சாயத்து நிர்வாகி செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற, சில வாரங்களிலேயே, தமிழக முதல்வராகவும் பதவியேற்கிறார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, அதன் நிர்வாகி செந்தில் குமார் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால், ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறாக உள்ளது. நல்ல முறையில் பன்னீர்செல்வம், முதல்வராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக, ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார். விரைவிலேயே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் புதிய முதல்வரை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும். வீண் கால விரயம் ஏற்படுத்தும் இத்தகைய பணிகளை, உச்சநீதிமன்றம் தலையிட்டு, நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் சட்டப்பஞ்சாயத்து நிர்வாகி செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments :
Post a Comment