Tuesday, 7 February 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மௌன அஞ்சலிTamilnadu CM O.PanneerSelvam pray in front of Jayalalitha memorial.)

சென்னை: தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நீண்ட தியானத்தில் ஈடுபட்டார்.

தமிழக அரசியலில் தொடர்ச்சியாக பரபரப்பான சூழல்கள் நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, விரைவில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் ஆளுநர் அறிவுரைப்படி, புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடம் முன்பு அமர்ந்து, தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தி வந்தார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்துவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tamilnadu CM O.PanneerSelvam pray in front of Jayalalitha memorial.

No comments :

Post a Comment